| 
         
          | 3173. | உண்ணிலா 
            வாவியா யோங்குதன் றன்மையை |   
          |  | விண்ணிலா 
            ரறிகிலா வேதவே தாந்தனூர் எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
 தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.      4
 |  
       
            4. 
        பொ-ரை: இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத
 உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
 இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல்,
 தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
       கு-ரை: 
        உள் - உயிருக்குள். நிலாவு - விளங்கும். ஆவியாய் - உயிராய். ஓங்கும் தம் தன்மை. உயிர்க்குயிராம் ஒருவனையும்
 என வருதல் காண்க. (சிவஞானசித்தியார். சூ. 9. பா. 5) ஆர் -
 நிறைந்த. எண்ணில் - அளவற்ற. அழகையுடைய மணிகள்
 அழுத்திய பொன் மாளிகையின்மேல் தெளிவான நிலாவிரித்துப்
 பரவும் தென்குடித்திட்டை.
 |