| 
         
          | 3212. | ஆகமத்தொடு மந்திரங்க |   
          |  | ளமைந்தசங்கத 
            பங்கமாப் பாகதத்தொ டிரைத்துரைத்த
 சனங்கள்வெட்குறு பக்கமா
 மாகதக்கரி போற்றிரிந்து
 புரிந்துநின்றுணும் மாசுசேர்
 ஆகதர்க்கெளி யேனலேன்திரு
 வாலவாயர னிற்கவே.                   2
 |  
       
            2. 
        பொ-ரை: வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி
 அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி
 மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும்
 அழுக்குமேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன்,
 திருஆலவாய் அரன்துணை நிற்பதால்
 .      கு-ரை: 
        பங்கமா(க) (பக்கமாக) புரிந்து எனக் கூட்டுக. சங்கதம் - சமஸ்கிருதம் என்பதன் திரிபு. பாகதம் - ப்ராகிருதம்
 என்பதன் சிதைவு. (வடமொழி) வடமொழியின் திரிபு ஆகியமொழி
 இரண்டாம். எப்பொழுது வந்தாய் என்ற தொடரை எப்போவந்தே
 என்று பேசுவது போன்றது. பாகதத்தொடு இரைத்துரைத்த -
 பிராகிருத மொழியினால் ஆரவாரித்துச் சொல்லிய.
       சனங்கள் - 
        வைதீகமாந்தர். வெட்குறு - வெட்கமடையத்தக்க. பங்கம் ஆ - பங்கப்படவும். வெட்குறுபக்கமாப் புரிந்து -
 பாகதத்தோடு இரைத்துரைத்தல் முதலிய செயல்களைச் செய்து.
 மா - பெரிய. கதம் - கோபத்தை உடைய. கரிபோல், திரிந்து -
 செருக்குற்று. மாசு சேர் ஆகதர் - ஆர்கதர் என்பதன் திரிபு.
 நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்தலால் மாசு சேர் என்றார்.
 |