| 
         
          | 3299. | மத்த யானையின் ஈருரி மூடிய |   
          |  | அத்த 
            னேயணி ஆலவா யாய்பணி பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண்
 சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.           2
 |  
            2. 
        பொ-ரை: மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும்
 நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து
 அழிப்பதற்குத் திருவுள்ளம் யாதோ? உரைப்பாயாக.
       கு-ரை: 
        மத்தம் - மயக்கம், மதங்கொண்டமையாலுண்டாவது. ஈர் -உரிக்கப்பட்ட. திருவுள்ளமே, பணி சொல்லி அருள்வீராக.
 பொய்த்த வன் தவவேடத்தர் - பொய்யாகிய வலிய
 தவவேடத்தையுடையவர். சித்தர் - மேல் பாசுர உரையால் அறிக.
 நிற்பதுபோல் நிலையிலா நெஞ்சு என்பது மூன்றாம் அடியிற்
 குறித்த பொருள். அதனை இனம் போன்று இனமல்லார் கேண்மை எனவரும் திருக்குறளால் 
        அறிக.
 |