3329. |
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் |
|
வெஞ்சொன்
மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. 10 |
10.
பொ-ரை: தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை
கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய
நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை
என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய
பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில்
உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு
பெற்றிலர்.
கு-ரை:
கஞ்சி மண்டையர் - கஞ்சி குடிக்கும் பாத்திரத்தைக்
கைக்கொண்டவர். மண்டை - ஒருவகைப் பாத்திரம் (புத்தர் ).
கையில் உண்கையர்கள் - கையே பாத்திரமாக உண்ணுகின்ற
கீழோர். (சமணர்) மிண்டர் - மண்டையரும் கையருமாகிய மிண்டர்
என்க. விஞ்சை - அறிவு. வித்தை - விச்சை எனப் போலியாய்,
அது மெலித்தல் விகாரம் பெற்று விஞ்சை என்றாயிற்று. நஞ்சு -
விடக்கறை. உள் கண்டன் - உள்ள கண்டத்தையுடையவன்.
|