| 
         
          | 3334. | தவந்த வென்புந் தவளப் பொடியுமே |   
          |  | உவந்த 
            மேனியி னானுறை யும்மிடம் சிவந்த 
            பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
 நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.     4
 |  
            4. 
        பொ-ரை: வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
 சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த
 திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து
 இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
       கு-ரை: 
        தவந்த - வெந்த, என்பும் - எலும்பும், தவளப்பொடி - வெண்திருநீறு, தவந்த என்ற அடையை அடுத்தும் ஒட்டுக. வெந்த
 வெண்ணீறணிந்து என்ற வாக்குங் காண்க. நிவந்த - மிகுந்த,
 ஓங்கிய.
 |