3434. நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக்
       கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக்
     கீழடர்த்தான்
கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட
     மூக்கிடமா
இடுமண லெக்கர்சூழ விருந் தானவ
     னெம்மிறையே.               8

     8. பொ-ரை: நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய
இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ்
அடர்த்த பெருமானாய், வளைந்த மடல்களையுடைய தென்னை
மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும்
திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும்
சிவபெருமானேயாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: இடர்கண்டு - துன்பப்பட்டு, அயர - தளர,
அடர்த்தான். கொடு - வளைந்த, மணல் எக்கர் - மணல் திடல்.