| 
         
          | 3989. | கழுமலத்தினுட் 
            கடவுள்பாதமே |   
          |  | கருதுஞானசம் 
            பந்தனின்தமிழ் முழுதும்வல்லவர்க் கின்பமேதரு
 முக்கணெம் மிறையே.                 12
 |        12. 
        பொ-ரை: திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே
 தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக
 ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து
 இன்பங்களையும் தந்தருள்வான்.
       கு-ரை: 
        திருக்கழுமலத்துள் கடவுள் பாதத்தைக் கருதிய ஞானசம்பந்தனின் தமிழ் வல்லவர்க்கு முக்கண் எம்மிறை இன்பமே
 தரும் என்பது இப்பாட்டின் பொருள்கோள்.
 |