3981. துங்கமாகரி பங்கமாவடுஞ்
 

     செங்கையானிகழ் வெங்குருத்திகழ்
 அங்கணானடி தங்கையாற்றொழத்
     தங்குமோ வினையே.                  4

     4.பொ-ரை:உயர்ந்ததும், பெரியதுமான யானை துன்புறும்படி
கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும், புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான
சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம்
வினைகள் தங்கா.

      கு-ரை: துங்கம் - உயர்வு. பங்கம் ஆ - துன்புறும்படி.
அடும் - கொன்று தோலை உரித்த. நிகழ் - பொருந்திய.
வெங்குருத்திகழ் அங்கணான் - வெங்குரு என்னும் தலத்தில்
விளங்குகின்ற சிவபெருமானது.