3981. |
துங்கமாகரி
பங்கமாவடுஞ் |
|
செங்கையானிகழ்
வெங்குருத்திகழ்
அங்கணானடி
தங்கையாற்றொழத்
தங்குமோ வினையே. 4
|
4.பொ-ரை:உயர்ந்ததும்,
பெரியதுமான யானை துன்புறும்படி
கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும்,
புகழுடன் விளங்கும்
திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான
சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம்
வினைகள் தங்கா.
கு-ரை:
துங்கம் - உயர்வு. பங்கம் ஆ - துன்புறும்படி.
அடும் - கொன்று தோலை உரித்த. நிகழ் - பொருந்திய.
வெங்குருத்திகழ் அங்கணான் - வெங்குரு என்னும் தலத்தில்
விளங்குகின்ற சிவபெருமானது.
|