| 
         
          | 4134. | வளங்கிளர் 
            கங்கை மடவர லோடு |   
          |  | களம்பட 
            ஆடுதிர் காடரங் காக விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
 இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.      4
 |       4. 
        பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்ற, இளம்பிறைச்சந்திரனை அணிந்த
 சடையையுடைய எம் பெருமானே! வளங்களைப் பெருக்குகின்ற
 கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு
 ஆடுகின்றீர்.
       கு-ரை: 
        வளம் கிளர் கங்கை - பாய்தலால் வளங்கள் அதிகரித்தற்குக் காரணமாகிய கங்கை. அரங்கு ஆக - காடு அரங்கு
 களம் ஆகப் பட ஆடுதிர் எனக்கூட்டிச் சுடுகாடு அரங்கினிடமாகக்
 கொண்டு ஆடுதிர் எனப் பொருள் கூறுக.
 |