2839.      வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
       எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
     ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
     சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.   6

     6. பொ-ரை: ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில்
கச்சாகக் கட்டி, றநுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத்
திருமேனியில் அணிந்துள்ள சங்கரனே! கொடிய துன்பத்தால்
அச்சமுற்றாலும், எம் தந்தையே! உன்திருவடிகளைப் போற்றுதல்
அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீ எம்மை
ஆட்கொள்ளும் வகை இதுவோ. (உலக நன்மைக்காகத் தந்தையார்
செய்ய விரும்பும் வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத்
தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: ஓர் வெருவு உறினும்-ஓர் அச்சம் உண்டானாலும்.
வெருவு-வெருவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். வெரு-முதனிலை.