2850. |
பூதம்
சூழப் பொலிந்தவன் பூந்தராய் |
|
நாதன்
சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே. 6
|
6. பொ-ரை:
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள்
சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை
எந்நாளும் போற்றி வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற
நீண்ட சடைமுடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும்
பேரின்பம் அருளுவான்.
கு-ரை:
நளிர்புனல் பில்குவார் சடைப்பிஞ்ஞகன் - குளிர்ந்த
கங்கை நீர் சொட்டும் நெடிய சடையில் மயிற்பீலியை
யணிந்தவனாகிய சிவபெருமான்.
|