2850. பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
  நாதன் சேவடி நாளும் நவின்றிட
     நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
     பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.         6

     6. பொ-ரை: திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள்
சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை
எந்நாளும் போற்றி வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற
நீண்ட சடைமுடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும்
பேரின்பம் அருளுவான்.

     கு-ரை: நளிர்புனல் பில்குவார் சடைப்பிஞ்ஞகன் - குளிர்ந்த
கங்கை நீர் சொட்டும் நெடிய சடையில் மயிற்பீலியை
யணிந்தவனாகிய சிவபெருமான்.