| 
         
          | 2851. | புற்றின் 
            நாகம் அணிந்தவன் பூந்தராய் |   
          |  | பற்றிவாழும் 
            பரமனைப் பாடிடப் பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
 சேவ தேறிய செல்வன் தானே.           7
 |       7. 
        பொ-ரை: புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து, திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, அனைவருக்கும்
 மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க, விடையேறும்
 செல்வனான அவன், நாம் மனம், வாக்கு, காயத்தால் செய்த
 பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான்.
       கு-ரை: 
        சே அது ஏறிய செல்வன் - விடையேறிய சிவபெருமான். பரமனைப்பாட - பரமனாகிய தன்னை நாம்பாட.
 பாவமாயின் தீரப்பணித்திடும் - நம்மைப் பற்றியிருக்கும்
 பாவங்களானவை பற்று விட்டொழிய ஆணைத்தருவான்; அது
 பகுதிப் பொருள் விகுதி. பரமன் - "யாவர்க்கும் மேலாம் அளவிலாச்
 சீருடையான்" (திருவாசகம்). தீரதல் - பற்றுவிடல். தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும். 
        (தொல்.சொல்.318)
 |