| 
         
          | 2855. | புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய் |   
          |  | அந்தம் 
            இல்எம் அடிகளை ஞானசம் பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
 பந்த மார்வினை பாறி டுமே.           11
 |  
  
               11. 
        பொ-ரை: உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள,
 என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத்
 திருஞானசம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக்
 கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப் பந்தித்து நின்ற வினைகள்
 யாவும் நீங்கும்.
       கு-ரை: 
        எம் அடிகளை ஞானசம்பந்தன் மாலைகொண்டேத்தி வாழுங்கள். அதனால் ஒளிபுக்க இடத்தில் இருள் தானாக நீங்குதல்
 போல நம்மைப் பந்தித்து நின்ற பழவினைகள் மாறிவிடும். அந்தம்
 இல் அடிகள் - முடிவில்லாத எம்கடவுள்.
 |