| 
         
          | 2857. | கோட்ட 
            கக்கழ னிக்கொள்ளம் பூதூர் |   
          |  | நாட்ட 
            கத்துறை நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
 நல்கு மாறருள் நம்பனே.               2
 |  
             2. பொ-ரை: 
        நீர்நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற
 நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத்
 தனக்குத்தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து
 மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு
 வழிபட அருள்புரிவாயாக.
      கு-ரை: 
        கோட்டகம் - வயலின் புறத்தே நீர்தேங்கி நிற்கும் இடம். கொள்ளம் பூதூரைச் சேர்ந்த நாடு - கொள்ளம் பூதூர் நாடு.
 |