2861. ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
  ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
       நல்கு மாறருள் நம்பனே.               6

     6. பொ-ரை: திருநடனம் செய்யும் தலைவனான
சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர்
என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும்
அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.

     கு-ரை: பதிகம் முற்றுப்பெறு முன்னமே ஓடம் கொள்ளம்
பூதூரையடைந்து விட்டதாதலால் ‘ஓடம் வந்தணையும் கொள்ளம்
பூதூர்’ என்று அருளினார்.