2862. |
ஆறு வந்தணை
யுங்கொள்ளம் பூதூர் |
|
ஏறு தாங்கிய
இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 7 |
7.
பொ-ரை: ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில்
இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும்
அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.
கு-ரை:
ஆறுவந்தணையும் கொள்ளம் பூதூர் என்று
பாடப்பட்டது. இவ்வாறே மயிலாப்பூரில் அங்கம் பூம்பாவையான
போது பதிகம் முற்றுப் பெறுமுன்னமே பூம்பாவை வெளிப்
பட்டமையையும் அறிக. (பெரியபுராணம்.)
|