2862. ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
  ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே.               7

     7. பொ-ரை: ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில்
இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும்
அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.

     கு-ரை: ஆறுவந்தணையும் கொள்ளம் பூதூர் என்று
பாடப்பட்டது. இவ்வாறே மயிலாப்பூரில் அங்கம் பூம்பாவையான
போது பதிகம் முற்றுப் பெறுமுன்னமே பூம்பாவை வெளிப்
பட்டமையையும் அறிக. (பெரியபுராணம்.)