| 
         
          | 2864. | பருவ 
            ரால்உக ளுங்கொள்ளம் பூதூர் |   
          |  | இருவர் 
            காண்பரி யான்கழ லுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
 நல்கு மாறருள் நம்பனே.               
            9
 |        9. 
        பொ-ரை: பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும்
 காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத்
 தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே!
 மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
 உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
       கு-ரை: 
        பருவரால் - பருத்த வரால் மீன்கள். உகளும் - துள்ளும்.
 |