| 
       
         
          | 2865. | நீர 
            கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த் |   
          |  | தேர 
            மண்செற்ற செல்வனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
 நல்கு மாறருள் நம்பனே.               10
 |      10, 
        பொ-ரை: நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும்,
 சமணர்களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத்
 தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால்
 உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத்
 திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
       கு-ரை: 
        நீர் அகம் - நீரைத்தன்னிடத்தே உடைய. நீரகக்கழனி என்றதால் கொள்ளம் பூதூரின் நீர் வளம், நில வளம் இரண்டையும்  புலப்படுத்தினார். 
        தேர் அமண் - தேரரும் அமணரும், தேரர் -
 சாக்கியர், அமணர் - சமணர் உம்மைத்தொகை.
 |