2867. |
கண்ணுத
லானும்வெண் ணீற்றினா னுங்கழ |
|
லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ்
சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக
லிந்நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு
மானன்றே.
1 |
1.
பொ-ரை: நெற்றிக் கண்ணையுடையவனும்,
திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவனும், திருவடிகளில் கழல்கள்
ஒலிக்கப்பண்ணுடன் இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி, மேலான
சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள், சிவபுண்ணியர்களாகிய,
நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்
புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான்.
கு-ரை:
திருப்புகலியுள் பெண்ணின் நல்லவளாகிய
உமாதேவியோடும் வீற்றிருந்தருளும் பெருமானே நெற்றிக்
கண்ணையுடையவனும், வெண்ணீற்றவனும், பண்ணிசை பாட நின்று
ஆடியவனும் பரஞ்சோதியும் ஆவான்.
|