2871. |
சாமநல்
வேதனுந் தக்கன்றன் வேள்வித |
|
கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழு
நாதனும்
பூமல்கு தண்பொழின் மன்னுமந் தண்புக
லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ
கனன்றே. 5 |
5. பொ-ரை:
நல்ல சாமவேதத்தை அருளியவனும், சிவனை
நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும், நூறாயிரம்
திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும்
தலைவனும், பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள்
நிலைபெற்றிருக்கும் அழகும், குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில்
அழகிய இளம்பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
அழகிய சிவபெருமானேயாவான்.
கு-ரை:
சாமவேதம் பாடினவனும், தக்கன் வேள்வியை
அழித்தவனும், லட்சம்பெயர் சொல்லித் தேவர் அருச்சித்துப்
பூசிக்கும் தலைவனும், (கோமளமாது) இளம்பெண்ணாகிய உமா
தேவியோடுங்கூடித் திருப்புகலியில் எழுந்தருளியிருப்பவனேயாவான்.
|