| 
         
          | 2873. | சேர்ப்பது 
            திண்சிலை மேவினா னுந்திகழ் |   
          |  | பாலன்மேல் வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள்
 விப்புகை
 போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக
 லிந்நகர்ப்
 பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர
 மனன்றே                           7
 |  
            7. பொ-ரை: 
        திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவனும், பாலனான மார்க்கண்டேயர் மீது
 சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும்,
 வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும்
 திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும்
 எல்லோருக்கும் மேலானவனான சிவபெருமானே யாவான்.
       கு-ரை: 
        சேருமிடம் திண்ணிய கைலை மலையாகத் தங்கினவனும், மார்க்கண்டர்மீது கோபித்தலைச் செய்து வந்து
 கொடிய யமனை உதைத்தவனும், திருப்புகலியில் மலையரையன்
 மகளோடும் எழுந்தருளிய பெருமானும் ஆவான். சேர்ப்பது என்ற
 சொல்லில் "அது" பகுதிப்பொருள் விகுதி.
 |