| 
         
          | 2883. | பண்பொலி 
            நான்மறை பாடியா டிப்பல |   
          |  | வூர்கள்போய் உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி
 மல்கிய
 கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட
 வூர்தனுள்
 வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர
 னல்லனே.                           
            6
 |       6. 
        பொ-ரை: நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று
 மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை
 உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச்
 சடையிலணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும்
 திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து அரன் அல்லனோ?
       கு-ரை: 
        உழல்வான்-சுற்றித்திரிவான். கண்பொலி நெற்றி வெண் திங்களான்-கண் விளங்குகின்ற நெற்றியின்மீது வெள்ளிய சந்திரனை
 அணிந்தவன். வெண்பொடி பூசி-வெண்மையான திருநீற்றைப்
 பூசியவன்.
 |