2887. |
தேரரும்
மாசுகொள் மேனியா ரும்தெளி |
|
யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம
தாதியான்
காரிளங் கொன்றைவெண்டிங்களா னுங்கட
வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர
னல்லனே. 10 |
10. பொ-ரை:புத்தர்களும்,
அழுக்கு உடம்பையுடைய
சமணர்களும் தெளிந்தறிதற்கரிய சொல்லும், பொருளுமாகி நின்ற
எம் ஆதிப்பிரான், கார்காலத்தில்மலரும் இளங்கொன்றைப் பூக்களை
அணிந்துள்ளவனும், வெண்ணிறச் சந்திரனைச் சடையில்
சூடியுள்ளவனும், வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய,
திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன்
அல்லனோ?
கு-ரை:தேரர்-புத்தர்.
மாசுகொள் மேனியர்-அழுக்குடைய
உடம்பையுடைய சமணர். குளித்தால் நீரில் உள்ள சிறு உயிர்கள்
இறந்து விடுமேயென்று நீராடாமையால் மாசுகொள் மேனியர் ஆவர்.
ஆர் அரும் சொல் பொருளாகி நின்ற-நிறைந்த அரிய சொல்லும்
பொருளுமாகி நின்ற. கார் இளங் கொன்றை-கார் காலத்தில் மலரக்
கூடிய இளம் கொன்றை, அன்றலர்ந்த கொன்றைப்பூ. கொன்றை
வெண்டிங்களானும்-கொன்றைமாலையோடணிந்த வெள்ளிய
சந்திரனையுடையவனும், வீரமும் சேர் கழல்-அதுவே பின்
கருணையும் செய்தது என்னும் பொருள் தரலால் எதிரது தழுவிய
எச்சவும்மை.
|