2900. |
அலைவளர்
தண்மதி யோடய லேஅடக் கிஉமை |
|
முலைவளர்
பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 1 |
1. பொ-ரை:கங்கையையும்,
குளிர்ந்த சந்திரனையும் சடை
முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல
முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள்
மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள்,
தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி
செய்கின்றான்.
கு-ரை:அலை-கங்கையை.
குளிர்ந்த சந்திரனைச் சடையின்
பக்கத்தே அடக்கி-தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன்.
கிளை-கொம்பு, மிளார் முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல
தாழை மரங்களுக்கின்மையால் இது வளர்தாழை யெனப்பட்டது.
தழைகளையுடையது-தாழை-நீளல். முதல்உயிர் நீண்டசொல்.
விம்மு-தழைத்த. கானல்-கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய
மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான்
இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை-சினையாகு பெயர். ஆட்சிசெய்யுமிடத்தை
ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.
|