2902. |
மானன
நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் |
|
கானதில் வவ்விய காரரக் கன் உயில் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின்றதொரு நன்மையே. 3 |
3.
பொ-ரை: மான் போன்ற மருண்ட பார்வையையுடைய
சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய
அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும்
புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரமானது
மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான
முத்தி இன்பத்தையும் தரும்.
கு-ரை:
மான் அ(ன்)ன நோக்கு இயைதேவிதன்னை-மான்
போன்ற பார்வை பொருந்திய தன் அரசியாகிய சீதையை. கான்(அது)
இல்-தண்டகவனத்தில், அது பகுதிப்பொருள் விகுதி. கார்
அரக்கன்-கரிய இராவணன். ஓர் மான்தனால் வவ்வியது-
வஞ்சமானால் கணவனைப் பிரித்துக் கவர்ந்தது.
செற்றவன்-அழித்தவன், செற்றவனாகிய அண்ணல்; கடைசி அடிக்கு
இராமேச்சுரம் சிவஞானமும் அதன் பயனாகிய முத்தியின்பமும்
பயப்பதாகிய, புண்ணிய ஸ்தானமாம் என்க. நன்பொருளும் என்று
விரிக்க. எண்ணும்மை விகாரத்தாற்றொக்கது. முத்தியின்பம்
நன்பொருள் எனப்பட்டது, உடனெண்ணப்படும் ஞானம்
முதலியவற்றிற் சிறத்தலின் நன்மை பண்பாகுபெயர். வைதேகி என்ற
பாடம் சிறக்கும்.
|