2907. பெருவரை யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட
  ப அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே. 8

     8. பொ-ரை: பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது
புகழ் குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும்,
தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு
அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும்
முழுமுதற்பொருள் சிவன் என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது
விளங்கித் தோன்றி, இராமேச்சுரத்திலுள்ள கோயிலில்
எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஒருவனே எல்லாப் பொருள்களிலும்
விளங்கித் தோன்றுகின்றான்.

     கு-ரை: பெயர் - புகழ். சாய்கெட - சாய்ந்து ஒழிய. “சாய்தல்
- (குறைதல்) ஓய்தல்” என்பன. தொல் “உரியியல்” உலகேழெனத்
திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம்
ஆடாமோ. என்னும் திருவாசகத்தோடு ஒப்பிடுக.