2908.
|
சாக்கியர்
வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார் |
|
வாக்கிய
லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே. 10 |
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற
உண்மை யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப்
பற்றி நிற்காது, ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய
அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில்
எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள்.
அவனருளால் எல்லா நலன்களும் உண்டாகும்.
கு-ரை:
ஏ(வு)க்கு - அம்புக்கு. கோளிலி எம் பெருமாற்கு
என்புழிப் போல இராமேச்சுரம் ஆக்கித் தனது தலமாகச் செய்து
கொண்ட செல்வன் சிவபெருமான்.
அருள் ஆக - திருவருள்
கிடைக்கும்படி. ஏத்தி வாழ்மின்.
|