| 
         
          | 2913. | சங்கவெண் 
            தோடணி காதினா னுஞ்சடை |   
          |  | தாழவே அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ
 காகவே
 பொங்கர வம்மணி மார்பினா னும்புன
 வாயிலில்
 பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர
 மேட்டியே.                          4
 |  
            4. 
        பொ-ரை: திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன்.
 தாழ்ந்த நீண்ட சடையுடையவன். உள்ளங்கையில் நெருப்பு
 ஏந்தியவன். சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த
 மார்புடையவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய
 கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய
 சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான்.
       கு-ரை: 
        வெண்சங்கத்தோடு அணிகாதினான் - சங்கக் குழையார் என்ற சுந்தர மூர்த்திகள் தேவாரத்தாலும் காண்க.
      அங்கை இலங்கு 
        அழல் ஏந்தினானும் - உள்ளங்கையில் விளங்கும் நெருப்பை ஏந்தினவனும். அரவம்மணிமார்பு விரித்தல்
 விகாரம், இசையின் பொருட்டு.
      பைங்கண் வெள்ஏறு 
        - பசிய கண்ணையுடைய வெள்ஏறு - இவ் ஈற்றடி திருநள்ளாற்றுப் பதிகத்திலும் ஞானசம்பந்தப்
 பெருமான் திருவாயில் வருகிறது.
 |