2924. |
ஊனம
ரும்முட லுள்ளிருந் தவ்வுமை |
|
பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை
யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை
வனன்றே.
4 |
4.
பொ-ரை: இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள்
உயிராய் விளங்குபவன். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன்.
வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன். வேதங்களை
அருளிச் செய்தவன். இடபத்தை வாகனமாக உடையவன். அவன்
தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன்
ஆவான்.
கு-ரை:
ஊன் - மாமிசம். உடலுள்ளிருந்த உமைபங்கன்
என்றது. உடலில் உள்ளது உயிர். உயிரில் உள்ளது சிவம்.
உயிரால் உடல் இயங்குகிறது. சிவத்தினால் உயிரியங்குகிறது.
எவ்வுயிரும் ஈசன் சந்நிதியதாகும் என்று சிவஞான சித்தியார்
ஒற்றுமை நயம்பற்றி உயிரிலிருக்கும் சிவனை உடலுள்
இருப்பானாகக் கூறியது இப்பாட்டு.
மறை
ஓதி - வேதங்களை ஓதினவன். மழுவாள் வலனேந்தீ
மறையோதீ என்பது சுந்தரமூர்த்திகள் தேவாரம்.
|