2936. |
வெள்ளெயி
றுடையவவ் விரவ லார்களூர் |
|
ஒள்ளெரி
யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே. 5 |
5.
பொ-ரை: வெண்ணிறப் பற்களையுடைய அசுரர்களின்
திரிபுரங்கள், ஒளி பொருந்திய நெருப்பால் எரிந்து சாம்பலாகுமாறு
செய்தவர் சிவபெருமான். மின்னுகின்ற பறவைகளை உடைய
திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
அப்பெருமானார் தேன்கமழும் கூந்தலையுடைய உமாதேவியின்
கணவராவார். அப்பெருமானாரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப்
பெறுங்கள்.
கு-ரை:
வெள் எயிறு உடைய-அரிய உடம்பில் வெள்ளைப்
பற்கள் மிக வெண்மையாய்த் தோன்றுகையால் வெள் எயிறு உடைய.
புறவு-பன்னிரு பெயர்களுள் ஒன்று. ஊரை எரியூட்டிய ஒருவனார்.
ஒளிர்-மின்னுகிற. புள்-பறவை.
|