| 
         
          | 2947. | விழியிலா 
            நகுதலை விளங்கி ளம்பிறை |   
          |  | சுழியிலார் 
            வருபுனற் சூழல் தாங்கினான் பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
 கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.     5
 |       5. 
        பொ-ரை: விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, இளம்பிறையையும், கங்கையையும் சடையில்
 தாங்கியுள்ளவன் சிவபெருமான். பழியிலாத அடியவர்கள் போற்றிப்
 பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
 அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வ மில்லாத
 வறுமைநிலையைப் போக்குவான்.
       கு-ரை: 
        நகு வெண்டலையையும் பிறையையும் கங்கை நீரைச் சுற்றிய சடையிடத்தே தரித்தவன். சுழியில் ஆர் -சுழியோடு
 பொருந்திய, வேற்றுமை மயக்கம். பைஞ்ஞீலி
 பாடலான்-திருப்பைஞ்ஞீலியின் கண் பாடுதலையுடையவனாகி
 வீற்றிருப்பவன்.
 |