2950. |
தொத்தின
தோள்முடி யுடைய வன்றலை |
|
பத்தினை
நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே. 8 |
8.
பொ-ரை: கொத்தாகவுள்ள இருபது தோள்களைக்
கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன்
நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்றான். முத்துப் போன்ற பற்களை
உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன்.
அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக.
கு-ரை:
தொத்தின-கொத்தாகிய. தோள்-தோள் இருபதையும்.
முடியுடையவன் தலை, பத்தினை-பத்தையும். முத்தினை முறுவல்
செய்தாள்-முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார்
என்றது, முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி,
பொத்தினன்-அணைத்துக் கொண்டவன். முத்தை இகழ்ந்தவள்
என்றும் ஆம்.
|