| 
         
          | 2950. | தொத்தின 
            தோள்முடி யுடைய வன்றலை |   
          |  | பத்தினை 
            நெரித்தபைஞ் ஞீலி மேவலான் முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
 பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.    8
 |  
      
             8. 
        பொ-ரை: கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன்
 நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
 விரும்பி வீற்றிருந்தருளுகின்றான். முத்துப் போன்ற பற்களை
 உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன்.
 அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக.
       கு-ரை: 
        தொத்தின-கொத்தாகிய. தோள்-தோள் இருபதையும். முடியுடையவன் தலை, பத்தினை-பத்தையும். முத்தினை முறுவல்
 செய்தாள்-முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார்
 என்றது, முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி,
 பொத்தினன்-அணைத்துக் கொண்டவன். முத்தை இகழ்ந்தவள்
 என்றும் ஆம்.
 |