| 
         
          | 2951. | நீருடைப் 
            போதுறை வானு மாலுமாய்ச் |   
          |  | சீருடைக் 
            கழலடி சென்னி காண்கிலர் பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
 தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.    9
 |        9. 
        பொ-ரை: நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், சிறப்புடைய
 கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை
 உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி
 என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய்
 வீற்றிருந்தருளுகின்றான்.
       கு-ரை: 
        நீருடைப்போது-தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய தாமரைப்பூ. பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி
 சென்னி காண்கிலார் என்பது எதிர்நிரல் நிறையாகலின், முறையே
 சென்னி, அடிகாண்கிலார் எனக்கூட்டுக. பார் உடைக் கடவுள்
 -உலகம் உடைமைப் 
        பொருளாகத் தான் உடையோனாகிய
 (உலகத்துப் பதியாகிய) கடவுள். பார்-பூமி. இங்கே உலகம் என்ற
 பொருளில் வந்தது. போதுறைவானும் மாலும் காண்கிலர்.
 |