| 
         
          | 2957. | ஞாழலுஞ் 
            செருந்தியு நறுமலர்ப் புன்னையுந் |   
          |  | தாழைவெண் 
            குருகயல் தயங்கு கானலில் வேழம துரித்தவெண் காடு மேவிய
 யாழின திசையுடை யிறைவ ரல்லரே.          4
 |  
       
	         4. 
        பொ-ரை: புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும்
 விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும்
 திருத்தலத்தில், யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும்,
 யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான்
 வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ?
       கு-ரை: 
        ஞாழல்-புலிநகக்கொன்றை. ஞாழற்பூவும், செருந்திப் பூவும் (செருந்தி-செந்நிறப் பூவையுடைய ஒரு மரம்,) புன்னைப்பூவும்
 ஆகிய இவைகள் விளங்கும் கடற்கரைச் சோலையில் உள்ள
 திருவெண்காடு மேவிய-யானையையுரித்த-இசையையுடைய-இறைவர்
 எனத் தனித் தனிக் கூட்டுக. ஞாழல், செருந்தி இரண்டும் முதல்
 ஆகுபெயர்.
 |