| 
         
          | 2958. | பூதங்கள் 
            பலவுடைப் புனிதர் புண்ணியர் |   
          |  | ஏதங்கள் 
            பலவிடர் தீர்க்கு மெம்மிறை வேதங்கண் முதல்வர்வெண் காடு மேவிய
 பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.          5
 |  
             5. 
        பொ-ரை: எம் இறைவர், பூதகணங்கள் பல உடைய புனிதர். புண்ணிய வடிவினர். தம்மை வழிபடுபவர்களின்
 குற்றங்களையும், துன்பங்களையும் தீர்த்தருளுபவர். அவர்
 வேதங்களில் கூறப்படும் முதல்வர். திருவெண்காடு என்னும்
 திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும்
 தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ?
       கு-ரை: 
        ஏதம்-குற்றம். ஏதங்களையும் பல இடர்களையும் தீர்க்கும் எமது பதி. வெண்காடு மேவி. பரமர் பாதங்களைத் தொழ என்பதற்கு 
        அடியார் என வினைமுதல் வருவித்துரைக்கப்படும்.
 அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி
 பயிலும் என்புழிப்போல. (தி.2. பா.43. பா.5.) பரமர்-பரம்பொருள்,
 மேலான பொருள்.
 |