| 
         
          | 2960. | நயந்தவர்க் 
            கருள்பல நல்கி யிந்திரன் |   
          |  | கயந்திரம் 
            வழிபடநின்ற கண்ணுதல் வியந்தவர் பரவுவெண் காடுமேவிய
 பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே              7
 |       7. 
        பொ-ரை: விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட
 அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான்
 ஆவார். அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி
 திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
 சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ?
       கு-ரை: 
        கயந்திரம் வழிபட:-கஜேந்திரம் பூஜைசெய்ய. யானை (கஜங்)களுக்குத் தலைமையுடையது கஜேந்திரம்.
 |