2964. நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
  செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.      11

     11. பொ-ரை: பசுபுண்ணியம், பதிபுண்ணியம் செய்த
நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன்,
செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும்
பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக்
காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும்.

     கு-ரை: பிறவித் துன்பங்கள் அவற்றிற்கு மூலகாரணமான
தொலைத்தற்கரிய வினைகளோடும் விட்டொழியும். நமது
ஆணை-மேலும் மேலும் வரக்கடவதுடன், வினையால் ஆனமையின்
அல்லலோடு அருவினையறுதல் ஆணை கூறியருளினார்.