|  2965. | 
          நிணம்படு 
            சுடலையி னீறு பூசிநின் | 
         
         
          |   | 
          றிணங்குவர் 
            பேய்களோ டிடுவர் மாநடம் 
            உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும் 
            குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.      1 | 
         
       
	
             1. 
        பொ-ரை: பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப்  
        பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர், உலர்ந்த  
        பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர். ஆயினும்  
        அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு  
        என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். 
            கு-ரை: 
        சுடலையில் எழும்பிய நீறு பூசிப் பேய்களோடு  
        இணங்குவர். அங்குப் பெரிய கூத்து ஆடுவர். உலர்ந்த  
        மண்டையோட்டில் உண்பர். ஆயின் அவரிடத்தில் என்ன குணம்  
        உளதாவது என்னற்க; உயர்ந்த குணம் எல்லாம் உடையர் என்க  
        கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி  
        தந்தையிலி தான் தனியன் காணேடி ... காயின் உலகனைத்தும்  
        கற்பொடி காண் சாழலோ. 
     
	 |