2975.
|
நற்றவர்
காழியுண் ஞானசம் பந்தன் |
|
குற்றமில்
பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே. 11
|
11.
பொ-ரை: நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன், குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு
என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, அழகு தமிழில்,
இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத
வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு
பெறுவார்கள்.
கு-ரை:
நல்ல தவத்தைச் செய்தவர்களையுடைய சீகாழி.
குற்றமில் பெரும் புகழ்க் கொள்ளிக்காடர்:- இறைவன் புகழே புகழ்.
ஏனையோர் புகழ் அனைத்தும் பொய்ப்புகழ் என்பதாகும். இறைவன்
பொருள் சேர் புகழ் என்ற திருக்குறட் பரிமேலழகருரையானும்
உணர்க.
|