2976. |
மருவமர்
குழலுமை பங்கர் வார்சடை |
|
அரவமர்
கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே. 1 |
1.
பொ-ரை: நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமா
தேவியை ஒருபாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த
சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை,
கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள்
சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும்.
கு-ரை:
மரு - வாசனை. தெய்வக் கற்புடைய அம்பிகையின்
கூந்தல் இயற்கை மணம் கமழ்வது ஆதலால் மரு அமர் குழல்
உமை என்றார். வார்சடை ... ... எம் அடிகள் - நெடிய சடையின்
கண்ணே பாம்பையும் விரும்பத்தக்க கொன்றை மாலையையும்
உடைய எம் அடிகள். குரவும் ஏனைய மரங்களும் கலந்தபொழில்.
|