| 
         
          | 2980. | தோடமர் 
            காதினன் துதைந்த நீற்றினன் |   
          |  | ஏடமர் 
            கோதையோ டினித மர்விடம் காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
 வேடம துடையணல் விசய மங்கையே.        5
 |   .     5. 
        பொ-ரை: இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன். நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன். காட்டிலே
 வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப்
 போர்த்துக் கொண்ட ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய அண்ணலான
 சிவபெருமான், பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய
 உமாதேவியொடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை
 என்னும் திருத்தலமாகும்.
       கு-ரை: 
        ஏடு - பூ இதழ். கோதை - கூந்தல், ஏடு அமர் கோதை-உமாதேவியார்; அன்மொழித்தொகை. பன் மொழித் தொடர்.
 மாகரி கதறப் போர்த்தது, இங்கு (கதற) உரித்து என ஒரு சொல்
 வருவிக்க. கரி போர்த்தது ஓர் வேடம், யானைத்தோலைப் போர்த்த
 கோலம். அ(ண்)ணல் - தலைவன்.
 |