| 
         
          | 2986. | விண்ணவர் 
            தொழுதெழு விசய மங்கையை |   
          |  | நண்ணிய 
            புகலியுள் ஞானசம் பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
 புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.        11
 |        11. 
        பொ-ரை: விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசயமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில்
 அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்கள்
 பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர்.
 அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும்.
      கு-ரை: 
        ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர். சிவ புண்ணியச் செல்வர் ஆவர். அவர்கள் சிவாநந்தப் பெரு
 வாழ்வு அடைவது திண்ணம்.
 |