| 2990.  | 
          கொம்பியல் 
            கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் | 
         
         
          |   | 
          தும்பிய 
            துரிசெய்த துங்கர் தங்கிடம் 
			வம்பியல் 
            சோலைசூழ் வைகல் மேற்றிசைச் 
            செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.  4 | 
         
       
           4. 
        பொ-ரை: பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான  
        உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த  
        மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,  
        நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும்  
        திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட்  
        சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும். 
            கு-ரை: 
        கொம்பு இயல் கோதை - ஸ்தலத்து அம்பிகையின்  
        பெயர். பூங்கொம்பு அசைவதுபோல் நடக்கின்ற அம்பிகை; கோதை  
        - பெண். குஞ்சரத்தும்பி - இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை.  
        துங்கர் - மேலானவர். வம்பு இயல் - வாசனையையுடைய சோலை  
        சூழ்ந்த தலத்துக்கு மேற்றிசையிலுள்ள கோயில். அடுத்த பாடலிலும்  
        இக் குறிப்பு வருதல் காண்க. செம்பியன் - சோழன்.  
       |