| 
         
          | 2991. | விடமடை மிற்றினர் வேத நாவினர் |   
          |  | மடமொழி 
            மலைமக ளோடும் வைகிடம் மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
 குடதிசை நிலவிய மாடக்கோயிலே.            5
 |  
            5. 
        பொ-ரை: இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர். வேதங்களை ஓதும் நாவினர்.
 அவர், இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான
 உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், இள அன்னப்பறவைகள்
 நடைபயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில்
 நிலவும் மாடக்கோயில் ஆகும்.
       கு-ரை: 
        விடம் அடைமிடற்றினர்-விடந்தங்கிய கழுத்தை யுடையவர். வேதம் நாவினர்-வேதத்தைப்பாடும் நாவினை யுடையவர்.
 மடம்மொழி- குதலைச் சொல்லையுடைய. மலைமகள். மட அனம்
 - இளம் அன்னப் பறவைகள். நடைபயில் - மாதர் நடையைப்
 பழகுகின்ற. நிலவிய - விளங்குகின்ற, மாடக்கோயில - துங்கர்
 தங்குமிடம்.
 |