3009. |
மாதமர் மேனிய னாகி வண்டொடு |
|
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே. 1 |
1.
பொ-ரை: உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக்கொண்டு, வண்டமர்கின்ற மலர்கள் உள்ள
சோலையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற, துன்பம்தரும் பகையசுரர்களின் மூன்று
கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான சிவபெருமானின்
திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும்.
கு-ரை:
போது அமர்பொழில் - மலர்கள் உள்ள சோலை.
விரவலர் - பகைவர்களாகிய அசுரர்கள். அரணம் மூன்றும் எய்த
- மதில் மூன்றையும் எய்த (நாதன்).
|