3011. வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
  புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.         3

.      3. பொ-ரை: கொடுந்துன்பம் தரும் நோயும், அதற்குக்
காரணமான வினைகளும் சிவனருளாலேயே தீரும் என்பதை
நிச்சயித்து, அவனைத் தொழுது போற்றுகின்றவர்கள் வசிக்கும்
திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற,
மாலைக்காலத்தில் உதிக்கும் வெண்பிறையோடு கங்கையும் சூடிய
சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, எல்லா நலன் களும்
உண்டாகும்.

     கு-ரை: வெந்துயர் - கொடுந்துன்பம். அதைத் தருவதாகிய
பிணியும், அதற்குக் காரணமான கன்மமும் முற்றும் பற்றறத் தீர்
விக்கும் புந்தியர் என்றது, தாங்கள் செய்வனவற்றைச் சிவார்ப்
பணமாகச் செய்தலும், தங்கட்கு வருவனவற்றைச் சிவனரு ளெனக்
கொண்டு அமைந்து நுகர்தலுமாகிய புத்தி பண்ணுபவர். இதனை
“நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே”
என்ற திருவாசகத் தொடராலும் அறிக. தொழுது எழு -
பேராசிரியர் உரை கொள்க. பிரயோக விவேகமுடையார் கருத்துக்
கொள்ளற்க. “மாலைக் காலத்தில் உதிக்கும் வெண் பிறையோடு
கங்கையைச் சூடிய நந்தி” என்பது மூன்றாம் அடியின் பொருள்.
நந்தி சிவனுக்கொரு பெயர். “நந்தி நாமம் நமச்சிவாயவே” என்பது
இத்திருமுறை. ஆறு - கங்கை. பொதுப் பெயர் சிறப்புப்
பெயராயிற்று.