3014. |
வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய |
|
பொறியர
வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே. 6
|
6.
பொ-ரை: நறுமணம் கமழும் புன்னை, புலிநகக் கொன்றை
முதலான மரங்கள் நிறைந்த அழகிய சோலையையுடைய
திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற,
கோவண ஆடை தரித்த, அழிதலில்லாத கொள்கைகளை உடைய
சிவ பெருமானின் நறுமணமிக்க மலர் போன்ற திருவடிகளைத்
தொழ, எல்லா நலன்களும் உண்டாகும்.
கு-ரை:
கிறிபடும் - பரிகசிக்கத்தகுந்த. உடையினன் என்றது
ஆடையில்லாத கோலத்தையுடையவன் என்றபடி. கேடு இல் -
கெடுக்க முடியாத கொள்கையன். மலர் அடி - மலர்போன்ற அடி.
|