3019. |
புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை |
|
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே. 11 |
11.
பொ-ரை: புண்ணியர்கள் தொழுது போற்றுகின்ற
திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றி,
அழகிய, குளிர்ச்சியான சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல
ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாடல்களை ஓதவல்லவர்களின்
பாவம் யாவும் நீங்கும்.
கு-ரை:
பண்ணிய - செய்த; இயற்றிய. புகழ்கொண்டு மற்றிவர்
செய்யும் உடம்பு என்பதனாலும்: செய்யுள் என்னும் பெயராலும்
அறிக. பறையும் - வெளிக்கிளம்பி நீங்கும் பறையும் பாவங்களான
என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கினாலும் அறிக.
|