3022. |
மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி |
|
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ. 3 |
3.
பொ-ரை: மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான்,
அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி
அஞ்சம்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல்?
கு-ரை:
மஞ்சு - மேகம். அஞ்சுரும்பார் குழலரிவை -
அழகிய வண்டுகள் ஒலிக்கும் குழலையுடைய அம்பிகை; வெம்சுரம்
- கொடியகாடு. பிரளயத்து உலகம் வெந்து சாம்பலான இடம்
வெஞ்சுரம் எனப்பட்டது. அதில் இறைவன் நடித்தது ஒரு
விளையாட்டாக இருந்தது என்பார்; வெஞ்சுரம் விளையாடல்
என்கொலோ என்றார்.
|