| 
         
          | 3028. | பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர் |   
          |  | வாமனன் 
            அறிகிலா வண்ண மோங்கெரி ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
 நாமன னினில்வர நினைதல் நன்மையே.      9
 |  
             9. 
        பொ-ரை: தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம்,
 ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான்
 வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம்
 மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.
       கு-ரை: 
        பூம(ன்)னும் - பூவில் வாழும். பொற்பு அமர் வாமனன் - அழகு பொருந்திய வாமன அவதாரமெடுத்த திருமாலும். பொற்பு
 அமர் என்பது குறிப்பு. கருக்குடி...நன்மையே - கருக்குடி நமது
 மனத்தில் வரும்படி நாம் நினைத்தல் நன்மையேயாகும். மனம் -
 மனன் எனப் போலியாய் ஏழனுருபுபெற்று மனனில் என்று ஆகி
 அதனோடு இன்சாரியை பெற்று மனனினில் என்று ஆயிற்று.
 |